Friday, October 24, 2008



கண்ணீருடன் கசியும் துவேஷம்

வேறெக்கணத்திலும் நிகழா

எனதந்த ஸ்பரிசத்தினூடே

எஞ்சியிருக்கிறது எனதான பால்ய காலப்பொழுதுகள்.

செவிமடுக்கும் வார்த்தைகளின்
நெகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது

எனதிந்தப் பொழுதின் இறுக்கம்.


மறைவிடமொன்றிலமர்ந்து

பதுங்கியபடி பாய்ந்தெழும்

எனதந்த நினைவுகளை உலுக்கியபடி

நெருங்கிவர காத்திருக்கிறது
பகைமையின் பொருட்டு
எனது தோழமைகள் துகிலுரித்த‌

நட்பின் துவேஷம்

விசும்பியபடி கசியும் கண்ணீர் துளிகளினூடே......

நன்றி : வடக்கு வாசல்

2 comments:

  1. //நெருங்கிவர காத்திருக்கிறது
    பகைமையின் பொருட்டு
    எனது தோழமைகள் துகிலுரித்த‌
    நட்பின் துவேஷம்
    விசும்பியபடி கசியும் கண்ணீர் துளிகளினூடே...... //

    எனது அனுபவமும் கூட இவ்வரிகள்.. நன்று

    ReplyDelete
  2. better you can remove the word verification dude. that would reduce the interest of the commentors.

    ReplyDelete