Friday, October 24, 2008


உனக்கான பொழுது

குரூரத்தின் நுரைத்ததும்பி வழியும் பகைமை
மறைத்தலின் பொருட்டு மேலெழும்பும் காமபகிர்வுடனான உனது பார்வை
கடலலையினின்று மேலெழும்பும்
அலைகளையொத்தபடி உயரும் உனதான நினைவுகள்
பிரிதலின் பொருட்டு
உனதுதடுகள் உமிழிந்த கசந்த வார்த்தைகள்
என சலனமற்று விட்டெறிந்த‌
உனதான பகிர்வுகளை மீண்டெழும்பியபடி
துளிர்த்து பெருகுகிறது வன்மம்.
இது குறித்து என்றைக்கேனும் உண்ருமுன்

விரிந்திருக்கும் உனதன்பை

இக்கண்மே வியாபித்துக் கொள்.

No comments:

Post a Comment