கோழிக் குழம்பு வாசனைஅதிகாலை தூக்கத்தை கலைத்தஎங்களின் விழிப்புகளுக்கெல்லாம்உரித்தான சேவல் அறிந்திராதுஅதன் வாழ்வின் இறுதி நாளை...மூலைத்தெரு முனீஸ்வரனுக்குபலி கொடுக்கும் நாள்வரைக்கும்சுற்றித்த்ரிந்ததென்னவோஎங்களைத்தான்....நிதர்சனப்பட்ட அதன் நினைவுகள்மனக்கண்முன் ஓடிக்கொண்டிருக்கபொங்கி வலிந்தகுருணை அரிசிச்சோற்றின் வாசனையிலும்கொதித்து அடங்கிய கோழிக்குழம்பின் வாசனையிலும்அடங்கிப் போனதுசேவலும் அது சார்ந்த நினைவுகளும்....
நன்றி : குங்குமம்
No comments:
Post a Comment