Thursday, October 23, 2008


சொற்கள் மீதான எதிர்பார்ப்பு்

எல்லோரை குறித்தும் படுயதார்த்தமாய் உரசி பார்க்கிறது உனது சொற்கள்.

விருப்பப்பட்டவைகளையும் விரும்பாதவைகளையும் மிக எளிதாய் விமர்சிக்கின்றன‌ உனது எண்ணங்கள்.

உதடுகளுக்கிடையே துளிர்க்கும் காற்றுவெளியில் கலந்துவிட்டபடி
எல்லோரும் இடம்பெற்றிருக்க

என்னை குறித்த உனது வெளிப்பாட்டை
எதிர்ப்பார்த்தபடி எத்தனிக்கிறது எனது மனம்.

எறுபுகளின் அணிவகுப்பையொத்தபடி
வரிசையாய் கட்டவிழ்ந்த‌

உனது சொற்களுக்குள்
வாழ்க்கைக் குறித்து எல்லாம் தொனித்திருக்க‌
உன்னையே வாழ்க்கையென‌ நினைத்துருகும்
என்னை குறித்து எதிர்ப்பார்த்து

ஒன்றுமற்றபடி ஏமாந்தது எனதிதயம்.

No comments:

Post a Comment