மழைக்காலப் பொழுது
கருத்த மேகங்களினூடே
துளிர்த்து பெருகும் மழையினை
தவிர்த்தொதுக்கி மேலெழுகிறது குடை. எனக்குள் உறையும் உனதன்பையும் உனதன்பை தாங்கிய உனதுள்ளத்தையும்
நனைவுற்றிடாமல் காக்கும் பொருட்டு...
வாக்குறுதிகள்
நமதிடையேயான நட்பைவிரிசலுற செய்தபடி
முகம்காட்டி மகிழ்வுறுகிறதுஇளகமறுக்கும் இதயத்தை
சிதைவிறசெய்தபடி மேலெழும்பும்
நிறைவுறா வாக்குறுதிகள்
நம்பிக்கையின் தடம்
கழுகொன்றின் பார்வைக்கு புலப்பட்ட சர்ப்பமென
போராட்டதினூடே கழிகிறதுஎனதிந்த நாட்கள் நாளைக்கேனும்.... என்றபடி கடந்த நேற்றை தகர்த்தபடி இன்றும் நிகழ்கிறது
எனதந்த நம்பிக்கையின் தடம்......