
தனித்த பொழுதொன்றில்
இடுகாட்டு வழியொன்றின் இருண்மையினை சுமந்தபடி எஞ்சியிருக்கிறது வாழ்வின் நீட்சி.
தொடருமென்ற நம்பிக்கையுடன் மேலெழும்பி உயரும்
புனைவினை புறந்தள்ளி
வெளியேறும் விருப்பத்தில்
மிதக்கிறது மீண்டெழும் ஞாபகங்கள்.
மற்றெந்த பொழுதகளையும்விட
உன்னதமென உருப்பெறுகிறது
என்னுள் விரிந்திருக்கும்
வாழ்வின் வலிமை குறித்துணரும்
எனதந்தப் பொழுதுகள்.
தாளவியலா பதட்டத்தின் வேளையினூடே
வியாபித்தபடி எத்தனிக்கிறது
மனதின் மூளையொன்றில் முளைத்து
களிப்போடு வெளியேறும்
எனதந்த தனிமை.....
No comments:
Post a Comment