வன்மத்தின் பக்கங்கள்
மெல்லிய தகிப்புகளின்
விளிம்பிலமர்ந்த
தூங்கவியலா இரவுகள்.
குரல்வளையை கடந்து திரும்பிய
சொற்களின் மீதான
கடக்கவியலா எதிர்பார்ப்பின் தருணம்.
மறுநொடியில் நிகழவிருந்த
மரணத்தின் கூர்முனைத் தீட்டிய குரூரங்களை
கடந்த தப்பிப்பிழைத்த பொழுது.
பின்னிரவு மழைநேரத்தில்
மிச்சமிருந்த மகிழ்ச்சியை உருக்குலைத்த
நணபனின் மரண செய்தி.
உள்ளத்தில் ஊடுருவி
மெல்லக் கடக்கிறது
வாழ்வின் உறைந்த பொழுதுகள்
நிசப்தத்தின் நிதானிப்பில் திரும்பிப்பார்க்கும்
வன்மத்தின் பக்கங்களென.
No comments:
Post a Comment