Friday, February 13, 2009

மரமான நான்

என்னுள் துளிர்த்து பெருகும்
தவிப்புகளுடனான துயர்களை உதிர்க்கிறேன்
கல்லென இறுகித் தளர்ந்த‌
உனதிதயத்தை தழுவும் பொருட்டு
பாலை நிலமொன்றில்
பொறுக்கவியலாமல்
சருகுகளை உதிர்க்கும் மரமென.....

No comments:

Post a Comment