Friday, February 13, 2009

என் மீதான நட்பு

தன் மொழியறியா
ஸ்பரிசத்தை உமிழ்ந்தவாறு
முகம்தூக்கி மலர்கிறது
உன் மீதான என் நேசம்.

கேவல் ஒலிகளுக்கிடையே
குளிர்காற்றென‌
உனதன்பை பரிசளித்து மலர்விக்கிறது
உன்னுடனான என் பொழுதுகள்.

தூங்கா இரவுகளின் நடுநிசிகளில்
புலர்ந்தெழுகிறது
கோட்பாடுகளற்ற கனவுகள்
பிணக்குகளற்ற நமதான உறவின் கிளர்ச்சியென.

பார்வை தகிப்புகளிடையே
உறுத்துவதாய் உணர்கிறேன்
உன் மீதான என் காதலை புறந்தள்ளும்
என் மீதான உன் நட்பை.....

No comments:

Post a Comment