Thursday, February 12, 2009

கனவுகளுடனான இரவுப்பொழுதுகள்


அற்பக்கனவுகளினூடே அல்லாடுகிறது

என் இரவுப்பொழுதுகள்.

பொறாமையுடனான

குரூரம் ததும்பியும்

நேயம் நிறைந்தும்

எத்தனிக்கின்றன அவை.

அச்சமுற செய்யும்

என்னுள் நிகழும் அக்கனவுகளை

விலக்க முனைந்து

தோல்வியுறுகிறேன்

இயலாமையின் வேடம் தரிக்கும் அற்பனென

கனவுகளின் பிரதிபலிப்பினூடே.

நன்றி : வடக்கு வாசல் (பிப்ரவரி 2009)

No comments:

Post a Comment