கனவுகளுடனான இரவுப்பொழுதுகள்
என் இரவுப்பொழுதுகள்.
பொறாமையுடனான
குரூரம் ததும்பியும்
நேயம் நிறைந்தும்
எத்தனிக்கின்றன அவை.
அச்சமுற செய்யும்
என்னுள் நிகழும் அக்கனவுகளை
விலக்க முனைந்து
தோல்வியுறுகிறேன்
இயலாமையின் வேடம் தரிக்கும் அற்பனென
கனவுகளின் பிரதிபலிப்பினூடே.
நன்றி : வடக்கு வாசல் (பிப்ரவரி 2009)
No comments:
Post a Comment