Thursday, May 9, 2013



மாந்தன் மே 2013 இதழில் இடம்பெற்ற எனது ஹைக்கூ……

வியர்வை விதைக்கும் மனிதர்கள்
அறுவடைக்கு வந்தது
வாட்டியெடுக்கும் வறுமை

மாலை மலரும் நேரம்
மனதிற்கு இதமளித்தது
ஓய்ந்து கொண்டிருக்கும் கோடை

தனித்துப் பயணிக்கும் படகு
துணைக்கு சென்றன
நீரில் மிதக்கும் இலைகள்

மிகுந்திருக்கும் மனிதக் கூடுகள்
மரணப் படுக்கையில்
மரங்களை இழந்த மண்

புத்தக் பக்கங்களில்
சிறகொடியும் மனம்
தொலைந்த மயிலிறகு.

-    கவிஞர் ச. கோபிநாத்
சேலம்
9790231240 

No comments:

Post a Comment