உன்னுடையதான அறை
தனிமையில் திளைத்திருந்த வேளையில்
யதார்த்தமாய நுழைய நேரிட்டது
உனது அறையில்.
முரண்பாடுகள் நிறைந்த
உனது தூக்கத்தை
அறையின் மெத்தைவிரிப்புகள்
அடையாளப்படுத்தின.
அந்தரங்கம் தொனித்து காணப்பட்ட
உனது ஆடைகள்
கண்டறியாத பலவற்றை
உயிர்ப்பித்தன.
உன் இதழ்களின் இனிமையை சுட்டிக்காட்ட
ஒற்றை துளி தேநீர் மட்டும்
ஒட்டிக் கொண்டிருந்தது
தேநீர் கோப்பையில்
எனக்காக...
ரசனை மிகுந்த
உனது வாசிப்புகளை
அடையாளம் காட்டின
விரிந்து கிடந்த புத்தகங்கள்.
உன்னோடு வாய்க்காத பொழுதை
உனதான நினைவுகளோடும்
நிஜங்களோடும்
உயிர்பித்து உணர்ந்தேன்
உனது அறையில்....
miga arumai nanbaa.... thodarnthu sellungal..
ReplyDelete