Tuesday, May 12, 2009

நானும் அதுவும்

அங்கும் இங்குமாய் அலைந்து
ஓரிடத்தில் தஞ்சம் புகுந்துவிடுகின்றது அது.
வெகு சீக்கிரத்தில்
ஒட்டிக் கொள்வதில்லையெனினும்
முயற்சித்தபடி இருக்கிறது.
கீச்சலிட்டும் குளைத்தும்
பயப்படுவதாய் அடையாளப்படுத்த முயன்றாலும்
எனக்கிடையேயான அதன் முதல் சந்திப்பில்
காலங்களையும் வெளிகளையும் கடந்து
மெல்ல நுழைந்து
இடம் அம்ர்ந்து கொண்டேன் அதனுலகில்
விடையளிக்க இயலாதெனினும்
பலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்
எனதான சினேகம் என்றெண்ணி அதனுடன்.
என்றேனும் சபிக்க நேரும் அக்கணத்தில்
எல்லைக்கடந்து திட்ட நேரும்
அதனுடனான உறவினை புறந்தள்ளி
''சீ, போ, நாயே....''' என்று
மனமுறுகி சூட்டி மகிழ்ந்து அழைத அதன்
செல்லப்பெயரையும் கடந்து.

No comments:

Post a Comment