Sunday, February 24, 2013



குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் விமர்சனம் – தமிழ்ஆத்தர்ஸ்.காம் இணையதளத்தில்…

வாசிக்க சொடுக்கவும்…

Tuesday, February 19, 2013


குழந்தைகளைத் தேடும் கடவுள்

பார்த்த உடனே கண்ணைக் கவரும் வகையில் மிக அழகான வடிவமைப்புடன் மிகச்சிறப்பாக நூலை வெளியிட்டுள்ளீர்கள். முதலில் அதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல ஓவியர் அன்பழகனின் ஓவியங்கள் கவிதை நூலுக்கு ஒரு கண்ணியமான கனமான தோற்றத்தைத் தந்து நூலின் மதிப்பை இன்னும் ஒரு படி மேலே உயர்த்துகின்றன.

உங்கள் கவிதைகளை மொத்தமாக வாசிக்கும்போது சமூக உணர்வுள்ள சமூகத்தின் உயர்வுகளைப் போற்றியும் இழிவுகளைக் கண்டித்தும் எழுகின்றா கவிதைக் குரலாகவே நான் காண்கிறேன். ஆங்கில ஆசிரியரான தங்களது தீராத் தமிழ்தாகமும் தமிழுணர்வும் நூல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காணும்போது பிரமிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன.

செல்பேசி, தொலைக்காட்சி போன்ற நவீனக் கருவிகளின் வருகை வாழ்க்கையை எளிமைப்படுத்திய போதிலும், இயற்கைச் சம நிலையையும் மென்மையான மன உணர்வுகளையும் அவை அழித்துவிட்டன என்பதைத் தங்களின் அநேகக் கவிதைகள் பேசுகின்றன.

மழை மாலை
எறும்புகளின் குடையாயின
காளான்கள்

வானத் தூரிகையின்
வண்ண ஓவியம்
அந்திப்பொழுது

போன்ற கற்பனைகளின் உள்ள நயமும்

கேட்பாரற்று வீழ்கிறது
தேசத்தின் எதிர்காலம்
போதையில் இளைஞர்கள்

ஊருக்கு வெளியே
சேரி
உயர்ந்த சமூகம்

போன்ற கவிதைகளில் மிளிரும் சமுதாய உணர்வும் தங்கள் கவிதைகளின் நேர்த்தியான கவித்துவத்துக்கு சான்றுகள்.

-    கவிஞர் வடுவூர் சிவ. முரளி, திருச்சி
எனது “குழந்தைகளைத் தேடும் கடவுள்” நூல் குறித்து அவர் எழுதிய விமர்சனக் கடிதத்தில்…

Saturday, January 5, 2013

Tuesday, December 25, 2012

Monday, December 24, 2012

Sunday, December 16, 2012

குழந்தைகளைத்தேடும் கடவுள்
நூல் விமர்சனம்

எழுத்தாளர் ஐரேனிபுரம் பால்ராசய்யா



மனதைத் தொடும் ஹைக்கூ கவிதையோடு களம் இறங்கியிருக்கிறார் கவிஞர் ச.கோபிநாத். தனது குழந்தைகளைத்தேடும் கடவுள் என்ற இந்த இரண்டாவது கவிதைத்தொகுப்பு நூலின் மூலமாக பல வாசகர்களின் மனதைத் தொட்டிருக்கிறார்.



எளிமையான விஷயங்கள் கைக்கூவாய் இவரது பேனாவிலிருந்து புறப்பட்டு அது வாசகனை வந்தடையும்போது பிரமிக்க வைக்கிறது. இந்த இளைய படைப்பாளி குழந்தைகளின் வாழ்வியலை அழகாய் வடித்தாலும் சமுதாயத்தின் மீதுதான் அதிகமாய் தனது சாட்டையை சுழட்டியிருக்கிறார்.



குழந்தைகளின் கேள்விகள் ஆழமாய் கற்பித்தன புத்தகங்களில்லா உலக அறிவு 
என்று குழந்தைகளைப்பற்றின அறிவுசார்ந்த கவிதைகளை வெறும் மூன்றே வரிகளில் முத்து முத்தாய் எழுதியிருப்பது நூலுக்கு மேலும் மேலும் அழகு சேர்க்கிறது.



சமுதாயப்பார்வையும் அதுசார்ந்த கவிதைகளும் நிஜங்களின் வலிகளை நியாயப்படுத்துகின்றன. உயிரினங்களின் உணர்வுகளை, பறவைகளின் ஏக்கங்களைக்கூட பதிவு செய்திருக்கிறார். 



திசை திரும்பின தாகத்துடன் பறவைகள் வறண்ட குளம்.



இப்படி முப்பது வரிகளில் சொல்லவேண்டிய விஷயங்களை வெறும் மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் சொல்லியிருப்பது அழகு.



வானத் தூரிகையின் வண்ண ஓவியம் அந்திப் பொழுது



என்று அந்திவானத்தின் அழகை மிகவும் அழகாய் ரசிக்கிறார்.



போதையேற்றும் அறிவியல் சாதனம் தொலைக்காட்சி 
என்று சமூகத்தின் பண்பாட்டு சீரழிவுகளை அழகாகவே படம் பிடிக்கிறார் இந்த அழகிய கவிஞர் ச.கோபிநாத்.



எளிமையும் எதார்த்தமும் கொண்டு கவிதைகள் கவன ஈர்ப்பை பெறுவதால் எல்லோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய கவிதைத்தொகுப்பு. இந்த குழந்தைகளைத் தேடும் கடவுள்.



வெளியீடு : வாசகன் பதிப்பகம்